உலகம்
உலகம் தோன்றியது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் என்று அறிவியல் கூறுகிறது. ஒவ்வொரு சமயத்தினருக்கும் உலகம் எப்படி எப்போது உருவானது என்பதை ஒரு கதையாக தனது மக்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தி வருகின்றனர். அவ்வாறாக உலகம் தோன்றியது பற்றி ஒவ்வொரு சமயமும் ஒரு கருத்து சொல்வதை காணமுடிகிறது. இந்திய எண்முறைப்படி 100 கோடி ஒரு பில்லியனுக்குச் சமமானது.
பூகோள அமைப்பு
உலகம் தோன்றியதிலிருந்து பல உயிர்களையும் இயற்கை பேரழிவுகளையும் சந்தித்து கடந்து வருகிறது. இதில் பல உயிரின மாற்றங்கள், பூகோள மாற்றங்கள் நடந்திருக்கலாம் மற்றும் நடந்ததையும் நடப்பதையும் நம்மால் அறிய முடிகிறது.
காலம் வரையறை
நமது இந்து சமய கணக்குப்படி காலம் கீழ்கண்டவாறு வரையறை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கிருத யுகம் (17,28,000 ஆண்டுகள்)
திரேதா யுகம் (12,96,000 ஆண்டுகள்)
துவாபர யுகம் (8,64,000 ஆண்டுகள்)
கலியுகம். (4,32,000 ஆண்டுகள்)
[ கலியுகம் 3102 BCE இல் தொடங்கியதாக நம்பப்படுகிறது ]
இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது. 12 மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்தரம். 14 மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பங்கள் இருக்கின்றன.
கல்பங்கள்:
வாமதேவ கல்பம்
சுவேத வராக கல்பம்
நீல லோகித கல்பம்
ரந்தர கல்பம்
ரெளரவ கல்பம்
தேவ கல்பம்
விரக கிருட்டிண கல்பம்
கந்தற்ப கல்பம்
சத்திய கல்பம்
ஈசான கல்பம்
தமம் கல்பம்
சாரசுவத கல்பம்
உதான கல்பம்
காருட கல்பம்
கெளரம கல்பம்
நரசிம்ம கல்பம்
சமான கல்பம்
ஆக்நேய கல்பம்
சோம கல்பம்
மானவ கல்பம்
தட்புருச கல்பம்
வைகுண்ட கல்பம்
லெச்சுமி கல்பம்
சாவித்ரி கல்பம்
கோர கல்பம்
வராக கல்பம்
வைராச கல்பம்
கௌரி கல்பம்
மகோத்வர கல்பம்
பிதிா் கல்பம்
நாட்காட்டி
இந்து சமய மக்களின் நாட்காட்டி பஞ்சாங்கம் மட்டுமே. தற்போது நாம் பயன்படுத்தும் நாட்காட்டியானது பஞ்சாங்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பொது நாட்காட்டி.