பார்க்கவகுலம்
பார்க்கவகுலம் (சுருதிமான், மலையமான், நத்தமான்) மூன்று உட்பிரிவு மக்களை கொண்ட ஒரு சமூகம். இவர்களின் முன்னோர்கள் (அ) வம்சத்தினர் மன்னர் ஆட்சி காலத்தில் குறுநில மன்னர்களாகவும் அரசாண்டதாகவும் சொல்லபடுகிறது. அதனால் பார்க்கவகுலத்தவர்களை சத்திரிய வம்சம் என்பர்.
வரலாறு
“தெய்வீகராஜனின் மக்கள் மலையமன்னர் நரசிங்க முனையரையர், நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார், சுருதிமன்னர் குலசேகரன் என்ற மூவர். அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமன்னர் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமன்னர் எனவும், மண்ணும், மலையும் ஆள்பவர், கல்வி, கேள்விகளில் தேர்ந்தவர் சுருதிமன்னர் எனவும் வழங்கப்பட்டார்கள்.”
பார்க்கவகுலம் ஒரு தொகுப்பு
பார்க்கவகுலம் மூன்று உட்பிரிவு (சுருதிமான், மலையமான், நத்தமான்) மக்களை கொண்ட நிலவுடைமை சமுதாயம். பாரதத்தின் (அ) தற்போதைய இந்தியாவின் தென்பகுதியில் பரவலாக பார்க்கவகுல மக்கள் தற்போது வாழ்கின்றனர். சுருதிமான், மலையமான், நத்தமான் மக்களே பார்க்கவகுலத்தவர்கள் ஆவர். 20ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் மக்களாட்சி முறையில் பார்க்கவகுலத்தை (உட்பிரிவு: சுருதிமான், மலையமான், நத்தமான்) உயர்வகுப்பு சமுதாயம் என்று குறிப்பிட்டனர்.
பார்க்கவகுல மக்களை பார்க்கவகுல சுருதிமான் மூப்பனார், பார்க்கவகுல மலையமான் உடையார், பார்க்கவகுல நத்தமான் நயினார் என்று கூறுவதுதான் சரியானது. தற்போது சில பகுதிகளில் பார்க்கவகுல உட்பிரிவு மக்களை சுருதிமார், மலையமார், நத்தமார் என்றும் திருத்தி பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய அரசு அலுவலக பதிவிலும் மற்றும் பயன்பாட்டிலும் சிலபகுதிகளில் மாற்றப்பட்டு இருக்கிறது. பார்க்கவகுல சமுதாய மக்களை தவிற பிற சமுதாய மக்களும் சில சுட்டுபெயர்களை பயன்படுத்துவார்கள். அவ்வாறான பெயர்களில் மூப்பனார், உடையார், நயினார் இருக்கிறது. பார்க்கவகுலம் சாராத மூப்பனார், உடையார், நயினார் மக்கள் பார்க்கவகுலத்தவர்கள் கிடையாது.
சுருதிமான், மலையமான், நத்தமான் மக்கள் பல பகுதிகளில் பிரிந்து குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்ததாலும் ஒருவருக்கு ஒருவர் திருமண உறவு இல்லாமலும் மேலும் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருந்ததால் இந்த சமுதாயம் வளர்ச்சி காணாமல் ஊர் அறியாமல் போனது. இவர்கள் ஒரு குழுவாக தாங்கள் வசிக்கும் அந்த அந்த பகுதியிலேயே மண உறவும், மக்கள் தொடர்பும் கொண்டதால் பார்க்கவகுல சமுதாயம் ஒன்றுபடாமலும் போனது. மேலும் அறியாமையால் தங்களின் குலத்தையும் அடையாளங்களையும் மறந்தனர் மற்றும் காப்பாற்றாமல் விட்டுவிட்டனர்.
சில மக்கள் முன்னோர் காத்துவந்த வாழ்வியல் (இந்து) முறையையே சுயநலத்துக்காக மாற்றி வாழ்ந்து பார்க்கவகுலத்தை அவமதித்து போய்விட்டனர். அவர்கள் திருந்தி நம்முடைய வாழ்வியல் முறையையை மீண்டும் தொடர்ந்து மாற்று கலாசாரத்தை கைவிட்டு முன்னோர்களுக்கும் பார்க்கவகுலத்திர்க்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்பது சங்கத்தின் ஒரு வழிகாட்டுதலாகும்.
போனவர்கள் போகட்டும். முன்னோர்கள் காத்துவந்த வாழ்வியல் நெறிமுறையையும் குலதெய்வ வழிபாட்டையும் பாதுகாப்பையும் உறுதிபடுத்த
உணர்வால் இணைவோம்! உறவால் மகிழ்வோம்! குலத்தை காப்போம்!
சங்ககாலம் தொட்டு மன்னர் ஆட்சி முதல் தற்போதுவரை ஒரு இனம் (அ) குடும்பம் (அ) வம்சமானது வீழ்வதும் புகலோடு வாழ்வதும் என்பது அணைத்து சமுதாய மக்களுக்கும் வம்சத்துக்கும் இயல்பானதே. இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், வீரன், வெற்றிகொண்டவன், தோற்றவன், வரலாற்றை அழிப்பது, மாற்றுவது என்பதெல்லாம் பலத்தையும் திறமையையும் வைத்தே நடந்திருக்கிறது. தற்போதைய காலத்திற்க்கு முன் பல நூற்றாண்டுகள் உள்ளன.
முதல் சங்கம், இடை சங்கம், கடை சங்கம் என்று சங்க காலத்தை கூறலாம். தமிழ்நாட்டை மையமாக கொண்டே அதாவது தமிழ் சங்கம் நடந்ததை அடிப்படையாக கொண்ட காலகட்டமே சங்ககாலம். இது கி.மு 500 முதல் கி.பி 200 வரையான காலம். (தற்போது கி.மு, கி.பி என்பது பெயர்மற்றம் செய்யப்பட்டு வருகிறது)
பொதுவாகவே காலத்திற்க்கு ஏற்றாற்போல் மனிதர்களின் வாழ்க்கை பலவாறாக மாறுபட்டிருக்கிறது. வரலாறுகள் அழிக்கபட்டிருக்கிறதும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் உண்மையே. அதனாலேயே இன்றும் சிலமக்களுக்கு சரியான புரிதலின்றி குழப்பத்திலும், பல சமுதாய மக்கள் குல பெருமை வேண்டியும், வரலாற்றை திரித்தும், பொய்யான ஆவணங்களையும், கல்வெட்டு செய்திகளையும், இலக்கியநூல் பாடல்வரிகளையும் திரித்து கூறி குழப்பங்களை உண்டுபண்ணி வருகின்றனர்.
எதுவாயினும் இன்று முதல் பார்க்கவகுலமும் அந்த குலத்தை சார்ந்த சுருதிமான், மலையமான், நத்தமான் மக்களும் தன்னை உணர்ந்து தன் குலத்தை பாதுகாத்து, பார்க்கவகுல சந்ததியான நம் குழந்தை செல்வங்களுக்கு பார்க்கவகுலம், வீரம், வாழ்வியல் கலாசாரம் பற்றிய புரிதலுடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை சொல்லிக்கொடுத்து சமுதாயபணியில் பங்குபெருவோம் முன்னேற்றமடைவோம்.
கால வரையறை